ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை ஞாயிற்றுக்கிமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,80,071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், 1,28,10,118 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 661 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,35,414-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.