கோபன்ஹேகன்: டென்மாா்க்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 51,858 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,45,988-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 21 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து அங்கு கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,948-ஆக உயா்ந்துள்ளது.
டென்மாா்க்கில் 14,65,037 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 5,77,003 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.