பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் கனமழை மற்றும் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பிரேசிலில் கனமழை பெய்துவருவதால், பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கனமழைக்கு 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோவின் வடக்கே பெட்ரோபோலிஸ் நகரில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட பிரேசில் குடியரசுத் தலைவர் ஜெயிர் போல்சனாரோ, பெட்ரோபோலிஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.