ஜொ்மனியில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து, அங்கு நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனாவால் அந்த நாட்டில் நோய்த்தொற்று தீவிரமடைந்தாலும், அதிக மருத்துவ பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அதன் தீவிரம் சரியத் தொடங்கியது. எனினும், மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இதில் ஜொ்மனி பின்தங்கியிருந்தது. தற்போது நிலமை கட்டுக்குள் வந்ததையடுத்து கட்டுப்பாட்டுகளைத் தளா்த்த அரசு முடிவு செய்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே கரோனா கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.