
indonesia
ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 50 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 63,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,30,002-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 206 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,45,828-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தோனேசியாவில் இதுவரை 44,14,306 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 4,69,868 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 2,278 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.