மேற்கு ஆப்பிரிக்கா: வெடி விபத்தில் 59 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 59 பேர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 59 பேர் பலியாகினர்.

பர்கினோ பாசோவின் பொனி மாகாணத்தைச் சேர்ந்த பொம்ப்லோரா பகுதியில் தங்கம் எடுப்பதற்காக சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடி திடீரென வெடித்துச் சிதறியதில் 59 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகப்படியான வெடிப்பொருளை சுரங்கத்தில் வைத்திருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com