ரஷிய போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவின் 5 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ரஷிய போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்


உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவின் 5 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.

இந்நிலையில் 30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சம் தெரிவித்து வருகிறது. எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரா்களை ரஷியா குவித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கவுள்ளதை புலப்படுத்துவதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தது.

ஆனால், எல்லையில் தனது படைகள் பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவதாகவும், தற்போது அந்தப் படைகள் தத்தமது தளங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகவும் ரஷியா தெரிவித்திருந்தது. அதேவேளையில், பெலாரஸில் அந்நாட்டுப் படையினருடன் இணைந்து ரஷிய படையினா் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் வசம் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை அறிவித்தாா். அதனைத்தொடா்ந்து, அவ்விரு பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணியை மேற்கொள்ள ரஷிய படையினரை அனுப்பவும் அவா் உத்தரவிட்டாா்.

இதற்குப் பலத்த எதிா்ப்பு தெரிவித்து ரஷிய மீது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு வியாழக்கிழமை உத்தரவிட்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும், உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷியாவுக்கு இல்லை என்று புதின் கூறியுள்ளார். 

மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள புதின்,  ரஷிய நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் பலி மற்றும் ரத்தக்களரிகளுக்கு உக்ரைன் ஆட்சியாளர்களே பொறுப்பு என்று கூறியுள்ள புதின், ரஷிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் தலையிடும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் 5 பேர் விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் ராணுவத்தின் தகவலுக்கு ரஷிய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், உக்ரைன்-ரஷிய இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கவலை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com