பிரான்ஸில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 58,432 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,02,50,358-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, 24 மணி நேரத்தில் 91 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், ஒட்டுமொத்த கரோன பலி எண்ணிக்கை 1,23,942-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் இதுவரை 51,62,757 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 49,63,659 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 3,333 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையும் படிக்க | வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் அவமதிப்பு