பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக கரோனா

உலகம் முழுவதும் கரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு நாட்டு தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக
பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக கரோனா
பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக கரோனா

உலகம் முழுவதும் கரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு நாட்டு தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனாவால் அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் ஆல்வி மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டேன். 4-5 நாள்களாக தொண்டை வலியும் , 2 நாள்கள் லேசான காய்ச்சலும் இருந்தது. கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் அதிபர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com