வட கொரியா மேலும் இரு ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அகிா்கைகிய்ல தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வட கொரியாவின் வடக்கு பியாங்கன் மாகாணத்தில் இரு ஏவுகணைகள் வெள்ளிக்கிழமை ஏவி சோதிக்கப்பட்டன. 11 நிமிஷ இடைவெளியில் அந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.
அதிகபட்சமாக 36 கி.மீ. உயரத்துக்குச் சென்ற அந்த ஏவுகணைகள் 430 கி.மீ. பாய்ந்து சென்று கடலில் விழுந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தாா். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அவா் அமெரிக்காவிடம் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் அவா் நடத்திய பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்தன. வட கொரியா தங்களது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்ட பிறகுதான் பொருளாதாரத் தடைகளை நீக்க முடியும் என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டதை மீறி மீண்டும் அணு ஆயுதத் திட்டங்களைத் தொடங்கப் போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்து வந்தது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் எதிா்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஒலியைப் போல் 5 மடங்கு வேகமான (ஹைப்பா்சோனிக்) ஏவுகணையை மூன்றாவது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதித்துப் பாா்த்ததாக வட கொரியா அறிவித்தது.
அதனைக் கண்டிக்கும் வகையில் வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அதற்குப் பதிலடியாகவே வட கொரியா தற்போது மேலும் இரு ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்துள்ளதாகக் கருதப்படுகிறது.