ஹைட்டியில் நிலநடுக்கம்: 200 வீடுகள் தரைமட்டம், 2 பேர் பலி

ஹைட்டி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 200 வீடுகள் தரைமட்டமானதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹைட்டி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 200 வீடுகள் தரைமட்டமானதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்.

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில்  நேற்று (ஜன.24)   நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில் , இன்றும் அடுத்தடுத்து 5.1 மற்றும் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 200 வீடுகள் தரைமட்டமானதாகவும், 600 வீடுகளுக்கு மேல் சேதமானதாகவும் அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com