ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 54,160 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,08,459-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21,227-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு இதுவரை 30,43,791 பேர் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்; 9,43,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.