ரஷியா படையெடுத்தால், உக்ரைனுக்கு படைகள் அனுப்பபடுமா? நேட்டோ தலைவர் பதில்

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப எந்த திட்டமும் இல்லை என்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவர்
நேட்டோ தலைவர்

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. 

உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

ரஷ்யா படையெக்கும்பட்சத்தில், அதிலிருந்து உக்ரைன் நாட்டை பாதுகாக்கும் வகையில் மேற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரிட்டனிடமிருந்து பெறப்பட்ட டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொண்டு கருப்பு மற்றும் வெள்ளை நிற குளிர்கால ராணுவ உடை அணிந்த உகரைன் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உக்ரைனுக்கு படைகளை அனுப்ப எந்த திட்டமும் இல்லை என்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சி நேர்காணலின் போது, ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவதை மறுப்பீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, "உக்ரைனுக்கு படைகளை அனுப்ப எந்த திட்டமும் இல்லை. அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நேட்டோ உறுப்பினராக இருப்பதற்கும் உக்ரைன் வலுவான, மிகவும் மதிப்புமிக்க பங்காளியாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com