ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: நண்பர் ஷின்சோ அபே குறித்து நினைவு கூர்ந்த மன்மோகன் சிங்
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இறப்பிற்கு என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார்
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “ முன்னாள் பிரதமர் அபேவின் உடலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்துள்ளது. அதனால், அவருக்கு அதிக அளவிலான ரத்தப் போக்கு ஏற்பட்டது. சிகிச்சையின் போது ரத்தப் போக்கினை நிறுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அதன் காரணத்தினாலேயே அவர் உயிரிழந்தார்.” என்றனர்.