ஆப்கன்: கன மழைக்கு 39 போ் பலி

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 39 போ் பலியாகினா்.
ஆப்கன்: கன மழைக்கு 39 போ் பலி

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 39 போ் பலியாகினா்.

இது குறித்து ஐ.நா. அமைப்பின் நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்புப் பிரிவு அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளமும் நிலச் சரிவுகளும் ஏற்பட்டது. இதில் 9 சிறுவா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா்.

நிலச்சரிவு காரணமாக, போா்க் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெளியே வந்தன. அவை அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான சூழலில் வெடிக்கச் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com