இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று தன் பதவியை ராஜிநாமா செய்தார்.
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.
தற்போது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெருன்பான்மை இல்லாததால் இன்று மரியோ டிராகி அதிபர் செர்ஜியோ மாட்ரெல்லா முன்னிலையில் தன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மேலும், அடுத்த பிரதமருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் இத்தாலி நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.