அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி வருவதையடுத்து அங்கு அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தின் மரிபோயா மாவட்டம், மிட்பைன்ஸ் நகரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய காட்டுத் தீ, மளமளவென 48 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரவியது. இது, மாகாணம் இந்த ஆண்டு சந்தித்த மிக மோசமான காட்டுத் தீ சம்பவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள 2,000 வீடுகள் மற்றும் வா்த்தக அமைப்புகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டதுடன் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.