உக்ரைனின் முக்கிய நகரத்தில் ரஷியா குண்டுமழை பொழிந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 150 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. போரால் உக்ரைன் கடுமையான இழப்புகளையும் சேதாரங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் பல முக்கிய நகரங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் சீரழிவைச் சந்தித்து வருகின்றன.
இதற்கிடையே, போர் சூழல் காரணமாக இருநாட்டு அரசியலிலும் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | போரில் இதுவரை 38 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் தகவல்
இந்நிலையில், உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் திங்கள்கிழமை அதிகாலை ரஷியப் படையினர் எரியும் தீபந்து போன்ற குண்டுகளை வீசியுள்ளனர். நெருப்புடன் தரையை நோக்கி வரும் அக்குண்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.