பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு பிலிப்பின்ஸ்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் தலைநகர் மணிலாவிலும் நேற்று புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 450-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிலிப்பின்ஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.