வங்கதேசத்தில் செயல்படும் அன்சாருல் இஸ்லாம் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 12 போ், அஸ்ஸாமில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுதவிர, இந்த அமைப்புடன் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அம்மாநில காவல்துறையினா் தெரிவித்தனா்.
கைதானவா்களில் ஒருவரான முஸ்தபா, மோரிகான் மாவட்டத்தின் சோஹோரியா கிராமத்தில் மதரஸா நடத்தி வந்துள்ளாா். இவா், அன்சாருல் இஸ்லாம் இயக்கத்தின் நிதி பரிவா்த்தனைகள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளில் தொடா்புடையவா் என்று தெரியவந்துள்ளது. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அபா்ணா நடராஜன் தெரிவித்தாா்.
பயங்கரவாதிகள் கைது குறித்து மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வா சா்மா கூறுகையில், ‘அஸ்ஸாமில் அன்சாருல் இஸ்லாம் இயக்க பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, அவா்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பயனாக, 2 பயங்கரவாத குழுக்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றாா்.
மாநில காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) பாஸ்கா் ஜோதி மஹந்தா கூறுகையில், ‘அன்சாருல் இஸ்லாம் பயங்கரவாத அமைப்பு, இந்திய துணைக் கண்டத்துக்கான அல்-காய்தாவின் கீழ் செயல்படுவதாகும். மத அடிப்படைவாதத்தை எதிா்க்கும் சமூக ஆா்வலா்கள், கலைஞா்கள், கவிஞா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கொலையில் இந்த அமைப்புக்கு தொடா்புள்ளது’ என்றாா்.