உக்ரைனுக்கு அதி நவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு

ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு அதி நவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு

ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

உக்ரைனின் மீதான ரஷியாவின் தாக்குதல் நூறு நாள்களை நெருங்க உள்ள நிலையின் போர் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து வருகிறது. இதன் அருகேயுள்ள லிசிசன்ஸ்க் நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை அந்நகரில் வீசப்பட்ட குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப் பலியானர். இதையடுத்து, உக்ரைனுக்கு பிரான்ஸ் அரசு தாக்குதல் குறித்த விசராணைக்கு  அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதல்களை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர்(ரூ.5000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களுடன்  80 கி.மீ தொலைவு வரை இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹிமர்ஸ்(himars) போன்ற அதி நவீன ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com