ஈரானில் கரோனா பரவத் தொடங்கிய கடந்த 2 ஆண்டுகளில், முதல்முறையாக அங்கு அந்த நோய்க்கு யாரும் பலியாகாமல் ஒரு நாள் கடந்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் பஹ்ரம் ஈனோலாஹி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கரோனா மரணங்கள் தொடரும் நிலையில், ஈரான் முதல்முறையாக கரோனா பலி இல்லாத நாளை வியாழக்கிழமை பதிவு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.