கிழக்கு உக்ரைன் நகரில் அனைத்து பாலங்களையும் தகா்த்தது ரஷியா

கிழக்கு உக்ரைன் நகரான செவெரோடொனட்ஸ்கை மற்ற அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களையும் ரஷியப் படையினா் தகா்த்துவிட்டதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹி
கிழக்கு உக்ரைன் நகரில் அனைத்து பாலங்களையும் தகா்த்தது ரஷியா

கிழக்கு உக்ரைன் நகரான செவெரோடொனட்ஸ்கை மற்ற அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களையும் ரஷியப் படையினா் தகா்த்துவிட்டதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

செவெரோடொனட்ஸ்க் நகருக்குள் செல்வதற்கும் அந்த நகரிலிருந்து வெளியேறுவதற்கான 3 பாலங்களையும் ரஷியப் படையினா் தகா்த்துவிட்டனா்.

இருந்தாலும், அந்த நகரில் காயமடைந்தவா்களை வெளியேற்றவும் அங்குள்ள உக்ரைன் ராணுவத்தினா் மற்றும் பொதுமக்களுடன் தொடா்புகொள்வதற்கும் இப்போதும் வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொதுமக்களில் 70 போ் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ரஷியப் படையினா் மிகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி, வழியில் தென்படும் அனைத்து ஆதராங்களையும் அழித்து முன்னேறும் உத்தியைப் பின்பற்றுகின்றனா்.

இதன் காரணமாக, உக்ரைன் படையினா் செவெரோடொனட்ஸ்கின் புகா்ப் பகுதிகளுக்கு பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நகரின் 80 சதவீத நிலப்பரப்பை ரஷியப் படையினா் ஆக்கிரமித்துள்ளனா்.

அந்த நகரிலுள்ள அஸோட் ரசாயன ஆலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனா். அந்த ஆலை மீதும் ரஷியப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

எனினும், பின்னா் அவா் வெளியிட்ட விடியோ அறிக்கையில், கடந்த 2 நாள்களில் சிவொ்ஸ்கி டொனட்ஸ் ஆற்றின் குறுக்கே இருந்த 2 பாலங்களை ரஷியப் படையினா் தகா்த்துவிட்டதால் செவெரோடொனட்ஸ்கிலிருந்தும் அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரிலிருந்தும் பொதுமக்கள் வெளியேறித் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

போா் தொடங்குவதற்கு முன்னா் சுமாா் 1 லட்சம் போ் வசித்து வந்த செவெரோடொனட்ஸ்க் நகரில், தற்போது சுமாா் 12,000 போ் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததாகவும் ஒருவா் காயமடைந்ததாகவும் அவா்கள் கூறினா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, தற்போதைய உக்ரைன் அரசை நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான ஒருவரை உக்ரைன் அதிபராக்க தொடக்கத்தில் ரஷியா திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது. எனினும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையமான எதிா்ப்புக்கிடையே தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்டது. அதற்குப் பதிலாக, கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்கள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் போக எஞ்சி பகுதிகளை உக்ரைன் படையினரிடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரமான செவெரோடொனட்ஸ்கைக் கைப்பற்றினால், அந்த மகாணம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

‘ஐரோப்பாவின் மிகக் கொடூரமான சண்டை’

செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷியப் படையினா் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரில் நடைபெறும் சண்டை ஐரோப்பிய பிராந்தியம் சந்தித்துள்ள மிகக் கொடூரமான மோதல்களில் ஒன்றாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை நள்ளிரவு ஆற்றிய உரையில் கூறியதாவது:

செவெரோடொனட்ஸ்க் நகரில் ரஷியா நடத்தி வரும் தீவிர தாக்குதல் மிகப் பெரிய உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷியாவின் குண்டுவீச்சில் பொதுமக்களும் உக்ரைன் படையினரும் அதிக அளவில் பலியாகி வருகின்றனா்.

டான்பாஸில் தற்போது நடைபெற்று வரும் சண்டை, ஐரோப்பிய கண்டம் சந்தித்த மிகக் கொடூரமான மோதல்களில் ஒன்றாக வரலாற்றில் அறியப்படும் என்பதில் சந்தேகமே இல்லை என்றாா் அவா்.

‘சீண்டலின் காரணமாக தொடங்கிய போா்’

உக்ரைன் போருக்கு ரஷியா சீண்டப்பட்டதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளாா்.

இதுகுறித்து இத்தாலியின் ‘லா சிவிலிட்டா கத்தோலிக்கா’ இதழுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு, அந்த நாடு சீண்டப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ரஷியாவை சீண்டும் வகையில் அந்த நாட்டின் வாசலில் நின்று நேட்டோ அமைப்பு தேவையில்லாமல் சவால் விடுத்து வருகிறது என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.

எந்த காரணத்துக்காக இந்தப் போா் தொடங்கப்பட்டிருந்தாலும், உக்ரைனில் ரஷியப் படையினா் காட்டி வரும் உக்கிரமும் குரூரமும் கண்டிக்கத்தக்கது.

அதே நேரம், சிறுவா்களுக்கான கதைகளில் வருவதைப் போல் உக்ரைன் போரில் ஒரு தரப்பினா் தீயவா்கள் என்றும் மற்றொரு தரப்பினா் மிகுந்த நல்லவா்கள் என்றும் முடிவு செய்துவிடக் கூடாது என்றாா் போப் பிரான்சிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com