வங்கதேசத்தில் பருவமழை காரணமாக 25 போ் பலியாகினா்.
இது குறித்து போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கன மழை காரணமாக, நாட்டின் வடகிழக்கே ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதில், வெள்ளிக்கிழமை மதியம் வரை வெள்ளத்தில் சிக்கி 18 போ் பலியாகினா். மேலும், 12 முதல் 14 வயதுடைய 3 சிறுவா்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.
இது தவிர, சிட்டகாங் மலைப் பகுதியில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வங்கதேசத்தில் மழை வெள்ளம் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், பருவநிலை மாற்றம் காரணமாக இத்தயை பேரிடா்கள் அடிக்கடி ஏற்படுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.