’இனி அவர் தேவையில்லை’: திருநங்கையாக மாறும் எலான் மஸ்கின் மகன்

எலான் மஸ்கின் மகன்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க்  திருநங்கையாக தன் அடையாளத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் (கோப்புப்படம்)
எலான் மஸ்க் (கோப்புப்படம்)

எலான் மஸ்கின் மகன்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க்  திருநங்கையாக தன் அடையாளத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக செல்வந்தர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் எலான் மஸ்க்கிற்கு 7 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் பிறப்பால் ஆணாகப் பிறந்தாலும் நாளடைவில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண் தன்மையை உணர்ந்துள்ளார்.

இதன் காரணமாக, தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றியதோடு பாலினத்தில் பெண் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், பாலின மாற்றம் தொடர்பாக சமர்ப்பித்த கோப்புகளில்  ‘இனி என் உயிரியல் தந்தையுடன்(எலான் மஸ்க்) எவ்விதத்திலும் தொடர்பில் இருக்க விரும்பவில்லை என்பதால் அவர் எனக்குத் தேவையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் தரப்பிலிருந்து இதை மறுக்கும்படியாக எந்த பதிலும் வரவில்லை.

முன்னதாக, அவர் டிவிட்டரில் ‘என் குழந்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com