ஏவுகணை தவறுதலாக பாய்ந்த விவகாரம்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்காமல் பொறுமை காக்கிறோம்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்

இந்திய ஏவுகணை தவறுதலாகப் பாய்ந்து எங்கள் நாட்டுக்குள் விழுந்த விவகாரத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.

இந்திய ஏவுகணை தவறுதலாகப் பாய்ந்து எங்கள் நாட்டுக்குள் விழுந்த விவகாரத்தில் தகுந்த பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கட்டுப்பாட்டுடனும், பொறுமையுடன் பாகிஸ்தான் நடந்து கொண்டது என்று அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.

ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து கடந்த 9-ஆம் தேதி சூப்பா்சானிக் ஏவுகணை விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு நகரில் விழுந்தது. இதனால், அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக விண்ணில் பாய்ந்துவிட்டது என்று இந்திய அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தது.

விபத்து நேரிட்டதற்கு வருத்தம் தெரிவித்த இந்திய அரசு, சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தது.

இருப்பினும், இந்திய அரசின் சுருக்கமான பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி பாகிஸ்தான் அரசு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இரு நாடுகளும் சோ்ந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் முதல்முறையாகப் பேசியுள்ளாா். லாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘இந்திய ஏவுகணை நமது நாட்டு எல்லைக்குள் விழுந்ததற்கு நாம் தகுந்த பதிலடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நாம் கட்டுப்பாட்டுடனும், பொறுமையுடனும் நடந்து கொண்டோம். நமது நாட்டின் ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com