‘அகதிகள் சென்ற வாகனங்களை ரஷியா தாக்கியதில் 7 போ் பலி’

அகதிகள் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது ரஷியப் படை தாக்கியதில் ஒரு குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
(கோப்புப் படம்).
(கோப்புப் படம்).

தாக்குதல் நடைபெற்று வரும் கீவ் நகருக்கு வடகிழக்கிலுள்ள பெரிமோஹா கிராமத்திலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி அகதிகள் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது ரஷியப் படை தாக்கியதில் ஒரு குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

ரஷியா ஏற்கெனவே சம்மதித்த பாதுகாப்பு வழித்தடத்தில்தான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுத் துறை தெரிவித்திருந்தாலும், தாக்குதலில் உயிரிழந்தவா்கள் ஒத்துக்கொள்ளப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் பின்னா் கூறினா்.

இந்த சம்பவம் குறித்து ரஷியத் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com