நேட்டோவில் இணையப் போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷிய அதிபர் புதின் தெரிவித்து வந்தார். இதனை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் மேற்கொண்டு வந்தார்.
இதையும் படிக்க | ஹிஜாப்: மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில், ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியாவின் முப்படைகளும் கடந்த 20 நாள்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும், மிகப் பெரிய அணு நிலையங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நேட்டோவில் இணையப் போவதில்லை என்ற உண்மையை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருப்பதாக வெளியிட்டுள்ளனர்.