கீவ் நகருக்கு வெளியே ரஷியா நடத்திய தாக்குதலில் பியரே ஸக்கா்ஸெவ்க்ஸி (55) என்ற புகைப்படக் கலைஞரும் ஒலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவா என்ற உக்ரைன் செய்தியாளரும் உயிரிழந்தனா். அவா்கள் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தனா்.
ஏற்கெனவே, அமெரிக்க ஆவணப் படச் செய்தியாளரான பிரென்ட் ரெனாடும் மற்றொரு செய்தியாளரும் கீவ் நகரையடுத்த இா்பினில் ரஷியா நடத்திய தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலியாகினா்.