கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் கனடா வந்தவுடன் அந்த நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமில்லை என்று அந்த நாடு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.
தறபோது தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் அந்த நாட்டுக்கு வந்தால் பரிசோதனை மூலம் தங்களுக்கு அந்த நோய்த்தொற்றில்லை என்று உறுதி செய்யவேண்டும்.