உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க, நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் தயாராகி வருவதாக, நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷியா, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது போா் தொடுத்தது. வான்வழியாகவும், கடல் மாா்க்கமாகவும் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோா் அகதிகளாக இடம்பெயர நோ்ந்தது. இதில் பெரும்பாலானோா் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.
இந்தப் போா் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆயினும், உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷியா தொடா்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்தாலும் அந்நகரை ரஷிய ராணுவத்தினரால் இன்னமும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை. ரஷியாவின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தத் தருணத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நான்கு நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு நேற்று புதன்கிழமை சென்றாா். இந்தப் பயணத்தின் வாயிலாக ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நேட்டோ அமைப்ப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் கூறுகையில், உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தாக்குதல் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம் இன்று வியாழக்கிழமை (மார்ச். 24) பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெறுகிறது.
இதில், "ரசாயனம், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான" உபகரணங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு உதவி உள்பட உக்ரைனுக்கு "கூடுதல் ஆதரவை" வழங்குவதற்கு நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் அதிகரித்து வரும் அச்சங்களுக்கு மத்தியில் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு நேட்டோ உறுப்பு நாடுகள் குறிப்பாக உக்ரைனுக்கு பொருள்களை அனுப்புவதற்கான முதல் முயற்சி இதுவாகும் என்றார்.
"எந்தவொரு ரசாயன ஆயுதப் பயன்பாடும் மோதலின் தன்மையை முற்றிலும் மாற்றிவிடுவதுடன்" தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும்." இதுகுறித்த "உண்மையான அச்சுறுத்தல்" ரஷியாவிற்கு இருப்பதாக ஜோ பைடன் ஐரோப்பாவிற்கு புறப்படுவதற்கு முன்னதாகக் கூறியிருந்தார்.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள பைடன், நேட்டோ உச்சி மாநாட்டில் கீவிற்கு ஆதரவை அதிகரிப்பதற்கும், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ளலாம் .
மேலும் ரஷிய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் பல்கேரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் நேட்டோ படைகளின் நான்கு போர்க் குழுக்களை அமைக்க நேட்டோ கூட்டமைப்பு ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் கூறினார்.