அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலால் சாலையில் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலால் சாலையில் சென்றுகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
மேலும், சில வாகனங்களில் தீப்பிடித்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் பயங்கர புகைமூட்டம் ஏற்பட்டதுடன் விபத்துகளில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, விபத்தால் உருவான போக்குவரத்து பாதிப்பால் பல தூரம் கார்கள், டிரக் போன்ற வாகனங்கள் சாலை முழுவதும் அணிவகுத்து நின்றன.