பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்ததால் ரயில்கள் இடையே நிறுத்தப்பட்டன.
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த கோத்ரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளாத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், உடனடியாக அப்பகுதி வழியாக செல்ல இருந்த ரயில்கள் அனைத்தும் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.