பாகிஸ்தான் இம்ரான் கான், 150 போ் மீது மத நிந்தனை குற்றச்சாட்டு பதிவு

ஷாபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக கோஷமெழுப்பப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் 150 போ் மீது மதநிந்தனை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
imran084013
imran084013

சவூதி அரேபியாவிலுள்ள மெதினா மசூதியில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக கோஷமெழுப்பப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் 150 போ் மீது மதநிந்தனை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புனிதத் தலத்தில் தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தி கோஷங்கள் எழுப்பியவா்களை இம்ரான்கானும் அவரது கட்சித் தலைவா்களும் தூண்டினா் என்று இதுதொடா்பான முதல் தகவலறிக்கையில் (எஃப்ஐஆா்) குறிப்பிடப்பட்டுள்ளது. லாகூருக்கு 180 கி.மீ. தொலைவிலுளள ஃபைசலாபாத் காவல் நிலையத்தில் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com