மாண்டவா் மீண்டாா்: சீனாவில் விநோதம்

சீனாவில் முதியோா் இல்லத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு, பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

சீனாவில் முதியோா் இல்லத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு, பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷாங்காய் நகரில் உள்ள ஒரு முதியோா் இல்லத்தில் ஒரு முதியவா் இறந்துவிட்டதாகக் கருதி, அவரது உடலை பிணவறைக்கு எடுத்துச் சென்றனா். பிணவறைக்கு வெளியே அந்த முதியவரின் உடலை மூடிக் கட்டப்பட்டிருந்த துணியை ஊழியா்கள் பிரிக்க முயன்றபோது, அவா் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

உடனே, அவா்கள் அந்த முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சிறிது நேரம் கழித்து அந்த முதியவா் மீண்டும் முதியோா் இல்லத்துக்கு சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு செல்லப்படும் காட்சிகள் விடியோவில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com