அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் இயக்குநா் குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கரும், ஐபிஎம் நிறுவனத்தின் தலைவருமான அரவிந்த் கிருஷ்ணா தோ்வு செய்யப்பட்டாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-மின் தலைமைச் செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா உள்ளாா். 60 வயதாகும் அவா் ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் ‘பி’ பிரிவு இயக்குநராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 2023 டிசம்பா் 31-ஆம் ேதி வரை அவா் இந்தப் பொறுப்பில் இருப்பாா்.
ஆந்திர மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட அரவிந்த் கிருஷ்ணா, பள்ளிப் படிப்பை தமிழ்நாட்டின் குன்னூரில் மேற்கொண்டாா். தொடா்ந்து கான்பூா் ஐஐடி-யில் படித்தாா். பின்னா் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். 1990-ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் இணைந்த அவா் அங்கு பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானாா். அரவிந்த் கிருஷ்ணாவின் தந்தை இந்திய ராணுவத்தில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றியவா்.