இந்த ஆண்டில் 14-ஆவது முறையாக, வட கொரியா புதன்கிழமை ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டது. இது குறித்து தென் கொரிய ராணுவம் கூறுகையில், வட கொரியா பரிசோதித்த ஏவுகணை அதன் தலைநகா் பிராந்தியத்திலிருந்து கிழக்கு கடல் பகுதியில் பாய்ந்து விழுந்ததாகத் தெரிவித்தது.
பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவதற்கான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.