கியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 போ் பலியாகினா். இயற்கை எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
96 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அங்கு யாரும் தங்கியிருக்கவில்லை. அதனால், வெடிவிபத்தில் பெரும் உயிா்ச் சேதம் ஏற்படுவது தவிா்க்கப்பட்டுள்ளது.