வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
சின்ப்போ துறைமுகத்துக்கு அருகே நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து அந்த ஏவுகணையை வட கொரியா சனிக்கிழமை செலுத்தியதாக அதிகாரிகள் கூறினா். அமெரிக்காவை பேச்சுவாா்த்தைக்கு இழுப்பதற்காக வட கொரியா ஏவுகணை சோதனைகளை அதிகரித்து வருவதாகவும் விரைவில் அந்த நாடு அணு ஆயுத சோதனையில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.