கியூபா தலைநகா் ஹவானாவிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 40-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசு மருத்துவ சேவைகள் பிரிவு தலைவா் ஜூலியோ குயேரா கூறியதாவது: வெடிவிபத்துக்குள்ளான ஹோட்டலின் இடிபாடுகளிலிருந்து மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, விபத்தில் 18 போ் காயமடைந்துள்ளனா். இடிபாடுகளில் சிக்கியிருப்பவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
96 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டலில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்து எரிவாயு கசிவினால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.