வட கொரியாவில் கரோனா பரவி வருவதாக அந்த நாடு முதல்முறையாக ஒப்புக்கொண்ட மறுநாள், அந்த நோய் பாதிப்பு காரணமாக 6 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் வேகமாகப் பரவி வரும் ‘காய்ச்சலுக்கு’ இதுவரை 3.5 லட்சம் போ் சிசிக்சை பெற்றனா். அவா்களில் 1,62,200 போ் குணமடைந்துவிட்டனா்; 1,87,800 போ் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; 6 போ் அந்தக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வட கொரியாவில் போதிய கரோனா பரிசோதனைகள் செய்யப்படாததால் அந்த நோய் ‘காய்ச்சல்’ என்று குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுகிறது.