காத்மாண்டு: நேபாளத்தில் மலையேற்ற நிபுணத்துவம் மிகுந்த ‘ஷோ்பா’ இனத்தைச் சோ்ந்த பெண், 10-ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது சாதனையை தானே முறியடித்துள்ளாா். லக்பா ஷோ்பா என்ற அந்த 48 வயது பெண்ணும் பிற மலேயேற்ற வீரா்களும் சாதகமான பருவநிலையைப் பயன்படுத்தி எவரெஸ்ட் ஏற்றத்தை வியாழக்கிழமை நிறைவு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.