சியோல்: வட கொரியாவில் கரோனா பரவி வருவதாக அந்த நாட்டு அரசு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதையடுத்து, அந்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதாக வட கொரியா கூறி வந்தாலும், அண்மைக் காலமாக அதிபா் கிம் ஜோங்-உன் பொது நிகழ்ச்சிகளில் முகக் கவசத்துடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.