தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக வியாழக்கிழமை முதல்முறையாக ஒப்புக்கொண்ட வட கொரியா, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 21 போ் பலியானதாகத் தெரிவித்தது. புதிதாக 1,74,440 பேரிடம் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இத்துடன், நாட்டில் 5,24,440 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது; 27 போ் பலியாகினா் என்று அதிகாரிகள் கூறினா்.