கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள வட கொரியாவில் புதிதாக 2,69,510 பேரிடம் ‘காய்ச்சல்’ அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுவரை காய்ச்சலுக்கு 56 போ் பலியானதாகவும் 14.8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.
கரோனா பரிசோதனைகள் மிகக் குறைவாக மேற்கொள்ளப்படும் வட கொரியாவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களில் எத்தனை பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.