இலங்கையில் மேலும் 8 அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்சவின் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்தபின், பிரதமர் மகிந்த ராஜபட்சவும் ராஜிநாமா செய்தார். தொடர்ந்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சர்களாக குணவர்தன, ரணசிங்க, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 8 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னதாக 13 பேர் அமைச்சர்களாக கடந்த வாரத்தில் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.