அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத்திருத்தம்: அமைச்சரவையில் தாக்கல்

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 21-ஆவது சட்டத் திருத்த மசோதா இலங்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டதாக பிரதமா் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தாா்.

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் 21-ஆவது சட்டத் திருத்த மசோதா இலங்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டதாக பிரதமா் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தாா்.

அனைத்துக் கட்சித் தலைவா்களின் கருத்துகளைக் கேட்க அனுப்பப்படும் என்றும், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் யாா் வேண்டுமானாலும் வழக்குத் தொடுக்கலாம் என்றும் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் வழங்கியது இந்தியா: பெட்ரோல் முழுவதுமாக தீா்ந்துள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் கொழும்புக்கு திங்கள்கிழமை சென்றடைந்தது. கடனுதவித் திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இந்தியா வழங்கியது. கடனுதவித் திட்டம் மூலம் இதுவரை 6 முறை இலங்கைக்கு இந்தியா டீசல் வழங்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com