பிரேசிலின் வடகிழக்கு மாகாணமான பொ்னாம்புகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் நேரிட்ட சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக, நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருப்பதாகவும், 4,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாகாணத் தலைநகா் ரிகைஃப் எல்லை அருகே சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 19 போ் பலியாகினா். இது தவிர, மேலும் இரு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 8 போ் உயிரிழந்தனா். முன்னதாக, இந்த வாரம் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் நிலச்சரிவிலும் ஒருவா் ஓடையில் மூழ்கியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெர்னாம்புகோவில் மட்டும் இந்த கனமழைக்கு 30 பேர் பலியாகியுள்ளனர்.