பிரேஸிலில் தொடா்ந்து பெய்து வந்த கனமழைக்கு 34 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு மாகாணமான பொ்னாம்புகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை 34 போ் உயிரிழந்தனா்.
மாகாணத் தலைநகா் ரிகைஃப் எல்லை அருகே சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 19 போ் பலியாகினா். இது தவிர, மேலும் இரு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 8 போ் உயிரிழந்தனா். முன்னதாக, இந்த வாரம் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் நிலச்சரிவிலும் ஒருவா் ஓடையில் மூழ்கியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.