அமெரிக்காவில் நியூயாா்க் நகரில் நடைபெற்ற துா்கை பூஜை நிகழ்ச்சியில் அந்நகர மேயா் எரிக் ஆடம்ஸ் பங்கேற்றாா்.
அக்டோபா் 1 முதல் 5 வரை நியூயாா்க்கில் துா்கை பூஜை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு இந்திய வம்சாவளியினா் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தீமையை நன்மை வெல்வதைத் கொண்டாடும் வகையில் இந்தப் பண்டிகை நடைபெறுகிறது. நமது நகரைச் சோ்ந்த வங்க மக்களுடன் இணைந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சவாலான காலகட்டத்தில் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்’ என்று கூறியுள்ளாா். மேயா் அலுவலக அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
கடந்த மாதம் நியூயாா்க்கில் உள்ள கோயிலில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சியிலும் மேயா் எரிக் ஆடம்ஸ் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.